சிவகுரு சிவசித்தர் ஆசியால்

உண்மையறியா மூடனாய்
ஊணாலே உடலை வளர்த்து
உயிர் என்னும் உன்னதம் உணரா
சராசரி மானிடனாய் இருந்த என்னை
பிறவியால் ஏற்பட்ட கழிவை அகற்றி
இடையே உணவால் உறவால் ஏற்பட்ட கழிவையும் அகற்றி
அனைத்திலும் அணுவாய்
ஆனந்த பரவொளியில் உருவாய்
இன்னமுதத் தமிழ் மொழியால்
ஈடில்லா உயிர் வாசியால்
உண்மையாய் உண்மை உணர
ஊரார் இழிசொல் அகற்றி
என்னுள்ளே எண்ணத்தின் வண்ணமாய்
ஏகாந்தன் வாழும் ஏற்புடம்பை மாற்றி
ஐயமான உடலை ஐஸ்வர்யமாக்கி
ஒப்பில்லாத ஒழுக்கநெறியால்
ஓதும் மறைபொருள் என்னுள்ளே உணர்த்தி
ஒளடத வாழ்க்கையை எனக்கு அகற்றி
அக்தே பரவொளிநாதனின் பக்தனாக
ஆனந்த பரவொளியில் உருவாய்
இன்னமுதத் தமிழ் மொழியால்
ஈடில்லா உயிர் வாசியால்
உண்மையாய் உண்மை உணர
ஊரார் இழிசொல் அகற்றி
என்னுள்ளே எண்ணத்தின் வண்ணமாய்
ஏகாந்தன் வாழும் ஏற்புடம்பை மாற்றி
ஐயமான உடலை ஐஸ்வர்யமாக்கி
ஒப்பில்லாத ஒழுக்கநெறியால்
ஓதும் மறைபொருள் என்னுள்ளே உணர்த்தி
ஒளடத வாழ்க்கையை எனக்கு அகற்றி
அக்தே பரவொளிநாதனின் பக்தனாக
எனை நிலை ஏற்றி
என்றும் வாசியின் உண்மை மாணவனாக
இறுதிவரையில் இயைந்திருக்க
எம் சிவகுரு சிவசித்தன் தாள் பணிந்து
இந்த நாளை இனிதே பயணிக்கின்றேன்!
என்றும் வாசியின் உண்மை மாணவனாக
இறுதிவரையில் இயைந்திருக்க
எம் சிவகுரு சிவசித்தன் தாள் பணிந்து
இந்த நாளை இனிதே பயணிக்கின்றேன்!
0 comments:
Post a Comment