Saturday, 25 October 2014

வாசியோகத்தின்_உண்மைப்பொருள்


‪#மனிதனே தன் உடல் நிலைமையை நீயே உன்னுள்ளே அறிந்து இருந்தால் தான், தன் உயிரை உணர்ந்து அறியமுடியும். தன் உயிர் தன்னுள்ளே அறிந்து வாழ்தல் தான், தன்னை தானாய் அறிந்து
#உயிரின்_உண்மை ஆற்றலை தன்அகத்தே கொண்டு செயல்படும் உண்மை பேராற்றலை உணர்த்துவது எம் வாசியோகமே .

‪#உண்மை "சிவசித்த நெருப்பின் பேராற்றலை" நீயே உன்னுள்ளே உணர்ந்து வாழ்ந்து பார், உன் உடலின் உண்மையாய் உணர்வாய் என்றும் பிரியாமல் இருப்பேன். --------------- சிவசித்தன்

வாசியோகத்தின்_உண்மைப்பொருள்

‪#தன்னை தானாய் உன்னுள்ளே உணரும்போது தான் , பிரபஞ்ச பிராணன் , உண்மையான பேரின்பத்தை , உடல் கழிவு நீங்கும் நிலையில் காட்டி உண்மை உடலில் செயல்படும்.

‪#மனித படைப்பு , உடல் உண்மையாகும் போது , பேரின்ப பேராற்றலை உடலுக்குள்ளே உணர்த்தி , உடல், உயிர் (ஆன்மா) என்ற இரு நிலையை ஒரே நிலையாக்கி உணர்ந்தும் உன்னத கலையே எம் வாசியோகம். உணர்ந்து பார், உண்மையாகத் தான் கூறுகிறேன். காலம் கடந்து சென்று விடும். உண்மையை உடனே உணர். உன் காலத்தை நானே அறிவேன்.உன்னுள்ளே உணர்வாய்.


Tuesday, 21 October 2014

எதுவும்_நிரந்தரமில்லை : 10

வாசியோக பயிற்சி செய்யும் மாணவர்களே 
நான் கற்று கொடுக்கும் உன் உடலுக்கு தகுந்த, சில வாசியோக பயிற்சிகளை விடாமல் தொடர்ந்து, செய்துகொண்டு வரும் போது, உடலில் உள்ள கழிவுகள் வெளியே செல்லும், அது சென்ற பின்பு தான், அடுத்த நிலைக்கு நான் உங்களை அழைத்து செல்வேன் .
உடல் கழிவு வெளியே செல்லாமல் இருந்தால் உனக்குத்தான் பாதிப்பு.கழிவு வெளியே செல்லவில்லை, என்றால் நான் சொன்ன விதிமுறைகளை நீ சரியாக கடைபிடிக்கவில்லை என்று தான் அர்த்தம்.குறிப்பிட்ட நாட்களில் உடல் கழிவு வெளியே செல்ல வேண்டும்.
முக்கியம் :
ஆற்றங்கரையில் இருந்து விளை நிலத்திற்கு வாய்க்கால் வழியாக நீரை தோண்டிவிடுவதால் பயிர் விளையாது, குறிப்பிட்ட நேரத்தில் ஆற்றின் மடையை திறந்து தண்ணீரை போக்குவதால் தான் பயிர் உண்டாகும். அப்படிதான் நீயும்.
"நான் வகுத்த வாசியோக விதிமுறைகள் கடைபிடித்தால் தான் உடல் உண்மையும் திருவருளும் உண்டாகும் .----- சிவசித்தன்"



எதுவும்_நிரந்தரமில்லை : 09

பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையே நிரந்தரமானது உன் உடல் உண்மையை அறிவதுதான்.
நீ உடல் உண்மை அறிந்தால் விதி நிரந்தரமில்லை .
நீ பெற்றவரும் மற்றவரும் நிரந்தரமில்லை 
நீ வாழ்வதும் நீயே தாழ்வதும் நிரந்தரமில்லை
இறைவனும் மனிதனும் நிரந்தரமானவன் ,இரண்டும் ஒன்றே உன்னை உன்னுள்ளே அறிந்து உணரும்போது இந்த உண்மை நிரந்தரமாகும் .

"ஏன் பிறந்தோம் உன் உடலின் உண்மை இரகசியத்தை உணர்ந்து ,உன் உடலின் உண்மை உயிரின் ஆன்மாவை இறைவனோடு நிரந்தரமாக்கு ".---------------- சிவசித்தன்

Monday, 20 October 2014

எதுவும்_நிரந்தரமில்லை : 08

"நான் அறிவேன்" என்று சொல்லும் போது "நான் அகந்தையாய்" இருக்கிறேன், என்று சொல்லும் உன் எண்ணமே நிரந்தரமில்லாதது. உணர்ந்தவன் சொன்னால் என்னை அப்படி தான் சொல்வாய்.
என்னோடு இருக்கும் போது நீ சொன்னது வேறு 
இன்று நீ சொல்வது வேறு ...
அகத்தில் ஒன்று பேசி , புறத்தில் வேறு பேசுகிறாய், இதுவரை நீ பேசியதை யாரும் அறியவில்லை என்று எண்ணாதே .... உன் அக இறைவன் உணர்வான் .
நீ உன் உடலை பார்க்கிறாய், நான் நிரந்தரமான அக செயலின் உண்மை உயிரின் ஆன்மாவை பார்க்கிறேன் , அது அறியும் உன் எண்ணத்தையும் என் எண்ணத்தையும், இறைவன் இல்லையென்று எண்ணாதே ...
உன் எண்ணத்தை அறிந்து பார், அகசெயலின் உண்மையான எண்ணத்தின் நெருப்பை நீ உணர்வாயா... எது நிரந்தரம்....
மனம், காயம், வாக்கு, --- படித்து இருப்பாய் , உடலின் நிரந்தரமாக செயலாவதை யார் உணர்த்தி இருக்கிறான் ...

"உணர்வை என்னிடம் கண்டவன் நீ ....படைத்ததில் நிரந்தரம் எது, உன் ஒவ்வொரு எண்ணமும் என்னுள்ளே 
என்றுமே நிரந்தரம் மறவாதே" .....சிவசித்தன்

எதுவும்_நிரந்தரமில்லை : 07


பெயர்,பணம்,புகழ், உன் உடலில் உள்ள உண்மையை நிரந்தரமாக அழிக்க கூடியது.
என்னோடு இருந்தவன் என்னை "பொழைக்க தெரியாத ஆள்" என்று சொன்னவன் ஏராளம் ...
சொன்ன நீயே என்னிடம் நிரந்தரமில்லை ...
என் அக இறைவன் சொன்ன உண்மை அகச்செயலை உலகில் வாழும் உண்மையான உடலுக்குள் இருக்கும் ஆன்மாவிற்கு உணர்த்தி வருகிறேன். அது அறியும் என் அகஉண்மை உணர்வை நிரந்தரமாக.
என்னோடு இருந்த காலம் உடலுக்கு சரியான வழி என்று தெரிந்து இருந்தும் , இன்று தவறான வழியை காட்டும் உன் எண்ணமே நிரந்தரமில்லாதது.

இறைவன் அனைத்து அகத்திலும் உண்டு நிரந்தரம்,அதை அறிந்து உணர்ந்தவன், எம் அகசெயல் எண்ணத்தையும் நானே அறிவேன்.


Saturday, 18 October 2014

‎சிவசித்தன்

‪#‎சிவசித்தன்‬ ---------------001
*******************
‪#‎நான்‬ பார்த்த சில வரிகள்....எனக்குள் நானே உண்மையானவன்.‪#‎உனக்குள்‬ நீ உண்மையாய் இருந்து உணர்ந்த பிறகு என்னைப்பற்றி பேசு.
‪#‎நீ‬ தவறான எண்ணம் கொண்டு இருந்தால் உன் எண்ணத்தால் நீ அழிவது உண்மை
#நான் நானாய் உன்னுள்ளே இருந்து செயல் படுவேன்.
*************************************************************************

நான் பல ஆண்டுகள் , உடல் உண்மையை சொல்லியும் படித்தவன் கேட்கவில்லை.
படித்தவனிடம் பக்குவமாகவும் சரி, உடல் உண்மை நிலையை பற்றியும் பேசபோவதில்லை.
நீ படித்த படிப்பு உண்மையாக உடலால் உணர்ந்து படிக்கவில்லை என்று என்னால் உனக்குள் உணர்த்த முடியும்.
.
"கல்லாதது உலகளவு" என்பதை மறந்து விடாதே....
நீ இதுவரை கற்ற கல்வியை வைத்து , உன் உடல் நோயை உன்னால் சரி செய்ய முடியவில்லை.....
மேலைநாட்டுகாரன் சொல்வதை தான் நீ நம்புகிறாய் ...
அவனும் உன் உடலை எப்படி காப்பாற்றுகிறான்.என்று நான் பார்க்கிறேன் .
தமிழனை, நீ தமிழனாய் மதிக்க பார். தமிழ் தான் என்றும் உண்மை மொழி.தமிழனால் முடியாது எதுவுமில்லை.
உன் தவறான எண்ணத்தால் தமிழனை நீ அழிக்க எண்ணினால் உன் எண்ணத்தால் நீயே அழிவாய்.என்பதை மறந்து விடாதே......
நீ படித்ததால் உனக்குள் இருக்கும் அறிவு அறிவே கிடையாது.உண்மையான அறிவுக்கு எவனாலும் விளக்கம் சொல்ல முடியாது.
*************************************************************************
"தன்னை எவன் ஒருவன் அறிகிறானோ அவனே உண்மை அறிவை அறிவான்".---------------- சிவசித்தன்
**************************************************************************


#sivasithan

ஒரு மனிதன் ஒருவரை கடவுளாக மனதில் எண்ணி வாழ்ந்துவரும் நிலையில் ,
அவன் உடல் நிலை குறைபாடு ஏற்பட்டால், அந்த மனிதன் மருத்துவமனைக்கு போக கூடாது. யாரை கடவுளாக எண்ணி வழி பட்டானோ , அவரின் கோவிலில் சென்று தன்னை குணபடுத்த, சொல்ல வேண்டும்.
வேறு எங்கு சென்றும் நீ உன் உடலை சரி செய்ய எண்ணினால் , நீ உன்னையும்,உன் கடவுளையும் , மற்ற மக்களையும் ஏமாற்றி கொண்டு இருப்பதை இந்த இயற்கை அறியும்.இயற்கை உன்னை கட்டாயம் தண்டிக்கும். உன் கடவுள் வரவில்லை என்றால் .... இல்லாத ஒன்றை நீ எண்ணி உன்னை அறியாமலே வாழ்கிறாய். உன் உடலின் உண்மை அணுக்களை அறிந்து உணர்.
உன் அகத்தில் தான் உண்மை எண்ணமான இறைவன் குடிகொண்டு இருக்கிறான்.அவனை அறியாமல் நீ செய்யும் உன் செயலால் உனக்கும் உடலுக்கும் உன் எண்ணத்தால் அழிவுதான் வரும். உன் உடலை அறி.உன் அகத்தை அறி.உன் அகத்தின் உண்மை எண்ணமே உண்மை இறைவன்.
மற்ற உயிர்களுக்கு உன் எண்ணத்தால் நீ தவறு செய்தால் நீ எண்ணும் உன் கடவுளே உன்னை காப்பாற்ற மாட்டார்.உண்மை எண்ணத்தின், உண்மை செயலே என்றும் செயலாகும்.
உண்மையான பக்தன் நீ என்றால், உண்மையாய் இறுதிவரை நீ எண்ணும் கடவுளுக்கு உண்மையாய் இரு.உன் உடலை இறைவன் படைத்தான் என்றால், அவனை வந்து நோயை தீர்த்து உன்னை காப்பாற்ற சொல்.இல்லையேல் நீ உண்மையான பக்தன் கிடையாது.------------- சிவசித்தன்



#sivasithan

‪#‎மனிதனே‬ நீ தினமும் உடலில் நோய் அதாவது வியாதி இல்லாமல் ஆனந்தத்தை
அனுபவித்து வாழும் நிலையை யார் தருகிறான் என்று பார். அவனே உன் அகத்தில் உண்மை எண்ணத்தை தோற்றுவிக்க முடியும்.
‪#‎உன்‬ உடலில் உள்ள கழிவால் , நீ எண்ணும் எண்ணத்தால் நீ எந்த மந்திரத்தை சொன்னாலும் உன் அணுக்கள் செயல் தடைபடும். அணுக்கள் செயலை அறியாமல் , உடலின் உண்மை அறியாமல் பேசுவதை நிறுத்து. அது உன்னை அறியாமலே உன்னுள்ளே உன்னை அழிக்கும்.
‪#‎உன்னுள்ளே‬ இருக்கும் ஆன்மா எமை அறியும். உன் உடல் உண்மை அறிந்தாலே உண்மை விளங்கும்.அதை விடுத்து இல்லாத ஒன்றை நீ எண்ணினால் உன் எண்ணமே உனக்கு ஆனந்தத்தை கொடுக்கும் , உண்மை உடலை அறியாமல் நீ எதையும் அறிய முடியாது.
‪#‎உலக‬ படைப்பின் உண்மை அறியாமல் தேவை அற்ற எண்ணத்தை நீ எண்ணுவதை நிறுத்து. உடல் உண்மை அறிந்து பேசு.உண்மையான அணுக்களின் ஆனந்தத்தை பெறாமல் , இறந்தால் மறுபிறவில் இதே நிலை தொடரும்........ என்னோடு வாழ்ந்து கொண்டு இருப்பவர்கள் சொல்லும் அகத்தின் உண்மை எண்ணத்தை மதிக்கப்பார். உன் ஆணவ எண்ணத்தால் நீயே அழிந்து விடாதே.------------- சிவசித்தன்


Saturday, 11 October 2014

எதுவும்_நிரந்தரமில்லை : 06

மனிதனே
உண்மையை உணர்வாய் உன்னுள்ளே இருக்கும், உடல் உறுப்பாக இல்லாமல் இருக்கும் உயிரை வாசியோகத்தினால், உயிர் என்ற நிலையை உருவாக்கும் போதுதான் உன் உடலின் உண்மை நிரந்தரமாகும்.
நிரந்தரமில்லாததை தேடாதே ...
ஓர் ஆண்டில் நீ உன்னுள்ளே இருக்கும்,உணர்வின் அகஉண்மையை நிரந்தரமாக உணரலாம்.
பல ஆண்டுகள் இருந்தும் உணராத இடம் நிரந்தரமில்லை என்பதை உணர். ஓர் ஆண்டு நீ உணர்ந்த அந்த உடல் உண்மையே உன்னை நிரந்தரமாக இருக்க சொல்லும், இடமே என்றென்றும் நிரந்தரமே. அதையும் உன் உடலால் நீயே உணர்வது நிரந்தரமாகும்.

நிரந்தரமில்லை என்றால் தேடாதே, நிலையான ஒன்றுதான் நிலையான நிரந்தரம், அது இருக்கும் இடம் வந்து நிரந்தரத்தை நீயே உன்னுள்ளே நிரந்தரமாக்கு .------------------ சிவசித்தன்


எதுவும்_நிரந்தரமில்லை : 05

மனிதனே
உனக்குள் யாரும் பெறாத நல்ல பெயர் உனக்கு இருக்கலாம்,என்ற எண்ணம் இருக்கலாம், ஆனால் உன் உடல் உண்மையா என்பதை நீ உணர். உனக்கு ஏன் உடலில் வியாதி வருகிறது.
இறைவன் வியாதியை உன் உடலில் நிரந்தரமாக வைத்த உன்னை படைத்தானா? , இல்லையே ....

அதுபோல தான் உன் பெருமைக்காக , நீ பெற்ற பெயரும், செல்வமும் நிரந்தமில்லை. 
--------------------------------------------------------------------------------------------------
உன் உயிரின் உண்மையை நீ அறியாமல், நீ வாழ்ந்தால் உன் உடல் 
நிரந்தரமில்லை, உயிர்தான் நிரந்தரமாக இருக்க நீ எண்ணு ."
--------------------------------------------------------------------------------------------------
உனக்கு கிடைக்கும் ஒவ்வொரு புகழும் நிரந்தமில்லை. உன்னை உன்னுள்ளே உணரப்பார்.

Wednesday, 8 October 2014

சிவகுரு சிவசித்தன் நெருப்பாற்றல்

சிவகுரு சிவசித்தரின் தாள் சரணம்.****** ***** ***** *****
இன்று குருவாரம். [2 /10 ] ஸ்ரீ வில்வம் யோகாமையத்தில் சிவகுரு சிவசித்தரின் வாசியோக மையத்தில் மாலை சரியாக 7 / 03 க்கு, தியான முத்திரை பயிற்சியை சிவகுரு சிவசித்தர் இறைவணக்கத்துடன் தொடக்கி வைத்தார். வழக்கமான முத்திரைஅமர்வில் அமர உத்தரவிட்டார்.

அதன்பின், தலையை சற்றே கவிழ்ந்த நிலையில் இருகண்கள் மூடியபடி, நாம் நெற்றியில் திருநீறு பூசும் நெற்றி மையத்தை கண்கள் மூடியபடி உற்று கவனிக்கக் கூறினார். அடுத்தநொடி இதுவரையில் உணரப்பெறாத புதுமையாக 'சுளிமுனையின்' ஆற்றல் இயக்கம் நெற்றி மையத்தில் உள்ளார்ந்த நிலையில் ஊடுருவி உள்நோக்கி அடிவயிறுவரையில் செயல்படுத்தியது.
இச்செயல் இயங்கிய வேளையில் இருகண்களில் கண்ணீராகவும் , இருநாசியிலும் நீராகவும் [சளி வடிவில் அல்ல ]தொடர்ந்து தாரை,தாரையாக வந்தவண்ணம் இருந்தது. அத்துடன் கொட்டாவியும் பலமுறை வந்தவண்ணம் இருந்தது. இந்நிலை எவ்வளவு நேரம் நீடித்தது என்பதை உணர முடியவில்லை. [அப்படியே எம்முள் ஆழ்ந்து, ஆழ்ந்து அமிழ்ந்தோம். அவ்வேளையில், சக பயிற்சியாளர்கள் பூஜைக்கு ஆயத்தம் செய்தவண்ணம் உரையாடியது ,ஏதோ,கிணற்றுக்குள் இருந்து கேட்ப்பது போல சற்று நேரம் கேட்க முடிந்தது.]
திடீரென்று , சிவசித்தரின் குரலோசை கேட்டது. போதும் ஓய்வெடுங்கள் என்று. ஆம் ஒருமணி நேரம் சென்ற சுவடே தெரியவில்லை. மீண்டும் இறைவணக்கத்துடன் இனிதே இன்றைய தியான முத்திரை நிறைவு பெற்றது. மீண்டு அடுத்த குருவாரத்தில் புதிய அனுபவங்களுடன் சந்திப்போம்.
இச்செயல் அனைத்தையும் சுக்கிலபட்ச சந்திரன் கருட பார்வையில் உற்று நோக்கி ரசித்துக் கொண்டிருந்தான்.
-சர்வம் சிவகுரு சிவசித்தருக்கு சமர்ப்பணம்.

#sivasithan

கண்ணை நம்பாதே, உன்னை ஏமாற்றும்
நீ காணும் தோற்றம், உண்மை இல்லாததுஅறிவை நீ நம்பு, உள்ளம் தெளிவாகும்
அடையாளம் காட்டும், பொய்யே சொல்லாதது

காவலரே வேஷமிட்டால் கள்வர்களும் வேறுருவில்
கண் முன்னே தோணுவது சாத்தியமே
காத்திருந்து கள்வனுக்கு கைவிலங்கு பூட்டிவிடும்
கண்ணுக்கு தோணாத சத்தியமே
போடும் பொய்த்திரையை கிழித்து விடும் காலம்
புரியும் அப்போது மெய்யான கோலம்
கண்ணை நம்பாதே...
ஓம் முருகா என்று சொல்லி உச்சரிக்கும் சாமிகளே
ருத்திராட்ச பூனைகளாய் வாழுரீங்க
சீமான்கள் போர்வையிலே சாமான்ய மக்களையே
ஏமாத்தி கொண்டாட்டம் போடூறீங்க
பொய்மை எப்போதும் ஓங்குவதும் இல்லை
உண்மை எப்போதும் தூங்குவதும் இல்லை
கண்ணை நம்பாதே...
பொன் பொருளை கண்டவுடன் வந்த வழி மறந்து விட்டு
கண் மூடி போகிறவர் போகட்டுமே
என் மனதை நான் அறிவேன்
என் உறவை நான் மறவேன்
எது ஆன போதிலும் ஆகட்டுமே
நன்றி மறவாத நல்ல மனம் போதும்
என்றும் அதுவே என் மூலதனம் ஆகும்
கண்ணை நம்பாதே...

Tuesday, 7 October 2014

#sivasithan

‪#‎இனி‬ நீ செய்யும் செயலுக்கு தண்டனை கிடைக்கும், நீ எண்ணும், வணங்கும் இறைவனால் ...இது உண்மை.
என்னை உணர்ந்த மனிதன் என்னுடன் இருக்கிறான். என்னை ஏற்காத மனிதன் என்னை விட்டு விலகி சென்று விடுகிறான்.
மக்களுக்கு நான் உணர்த்த முடிவு செய்த முதல் மூன்று செயல்கள்...
அதில் தான் எத்தனை சிரமங்கள் , வருத்தங்கள், ஒரு உண்மையை மக்களுக்கு சொல்ல நான் பட்ட சிரமங்கள் ஏராளம் ...
மூன்று செயல்கள்...
1.உடலில் வியாதிகள் இல்லாமல் வாழ வைப்பது.
2. உடலில் கழிவுகள் வெளியே சென்றால் தான் உடலுக்கு உயிர் வரும் என்ற உண்மை உணர்த்துவது
3. உடலில் உண்மையான பேராற்றலை உணர முடியும்.
என்னை சிறு வயதில் இருந்து கோவிலுக்கு என் பெற்றோர் அழைத்து செல்லும் போது நான் வேண்டுவது , அனைவரும் உடலால் உண்மை உணர்ந்து வாழும் போதும் என் எண்ணம் செயலாகும் போது தான் , இந்த கோவில் கூட எதற்கு என்பதை மனிதனுக்கு உணர்த்துவேன், என்ற எண்ணம் தான் எனக்குள் ஓடிக்கொண்டிருக்கும்.
2004 ம் ஆண்டு எனக்கு திருமணம் நடைபெற்ற பிறகு , நான் ஏன் வாசியோகத்தையும் , என் பள்ளி ஆசிரியர் பணியையும் முழுவதுமாக கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டேன்.
------------- தொடரும் -------------- சிவசித்தன்

#sivasithan

‪#‎இனி‬ நீ செய்யும் செயலுக்கு தண்டனை கிடைக்கும், நீ எண்ணும், வணங்கும் இறைவனால் ...இது உண்மை.
காரணம் 2000 ம் ஆண்டில் ஆசிரியர் பணியில் சேர்ந்த பிறகு, ஏன் வாசியோகம் பலருக்கு , மாணவர்கள் மூலம் தெரியவந்தது.
2011 ம் ஆண்டு நவம்பரில் 30 என்னுடைய பள்ளி ஆசிரியர் பணியை விட்டு விட்டு முழுவதுமாக என் வாசியோகத்தை கவனம் செலுத்த ஆரம்பித்தேன்.
காரணம் , அதிகமான மக்கள் என் வீடு தேடி வர ஆரம்பித்தனர். அவர்களுக்காக முழு நேரம் செலவிட ஆரம்பித்தேன்.
நான் என்ன எண்ணம் எண்ணினேனோ அது என் இயற்கையால் நடக்க ஆரம்பித்தது. ஏன் இயற்கை எனக்குள் பலவித உடல் உணர்வுகளை மீண்டும் மீண்டும் உணர்த்திகொண்டுதான் இன்று வரை இருக்கிறது.
நானும் என் இயற்கையும் ஒன்று.
நானும் என் வாசியும் ஒன்று
அண்டமும் பிண்டமும் ஒன்றே .
------------- தொடரும் -------------- சிவசித்தன்

Sunday, 5 October 2014

எதுவும்_நிரந்தரமில்லை : 04

எம் வாசியோகத்தை மனிதனே நீ செய்தால்...
உடலில் உள்ள கழிவு நீங்கி உண்மை உணர்வால்
உண்மையான இதுவரை நீ உணராத, உண்மை அறிவை, நிரந்தரமாக உன் அகத்தில் உணர்வாய்.
அதிகமான பணம் சேர்க்க எண்ணினாலும், அதிகமான இடம் சேர்க்க எண்ணினாலும், --- நீ நிரந்தரமாக இருக்க போவதில்லை.
அதிகமாக இடங்களில் நான் சொல்வதை மற்றவன் கேட்க வேண்டும் என்ற எண்ணமும்,இருந்தால் -- நீ நிரந்தரமாக இருக்க போவதில்லை.
அதே நேரத்தில் எம் வாசியோக மையத்தில் வந்து வாசியோக பயிற்சி செய்து விட்டு என்னைவிட, வயது அதிகமாக உள்ளவர்கள் , அவர்கள் சொல்லும் சொல்லை நான் கேட்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட அனைவரும் இன்று வரை என்னிடம் நிரந்தமாக இருக்கவில்லை.
-----------------------------------------------------------------
என் வயது : 30.03.1977( பிறந்த தேதி கணக்கிட்டு கொள்ளவும் .)
------------------------------------------------------------------
வாசியோக சிவகுரு என்று ஏற்றுக்கொண்டும் ,வாசியோக பயிற்சி செய்துகொண்டும், உடலில் வியாதி சரியான பிறகு உன் உண்மையான எண்ணத்தை நீ என்னிடம் காட்டுகிறாய்.

உன் உடலின் உண்மை உணர்வை உணர்த்திய, என்னிடம் உன் எண்ணத்தை திணிக்காதே ... உன் எண்ணத்தால் நீயே ....
நன்றும் தீதும் பிறர்தர வாரா ....