Wednesday, 27 August 2014

Sivasithan

சிவகுரு சிவசித்தர் தாள் சரணம்.
***** ***** ***** *****
மதுரை சிந்தாமணி சிவகுரு சிவசித்தரின் வாசியோகம் பயிலும் அனைவருக்கும், சூட்சுமம் உணர்த்தும் உன்னதம் உணர்ந்தவர்களே. அவ்வகையில், இன்று ஒரு தகவல்.
____________ ___________ 
இந்த பூமியில் வாழ்ந்த நம் முன்னோர்கள் படைத்ததே கடவுள்களின் உருவ வடிவம், நாம் இறையுணர்வை இதுபோன்ற மானுட உருவில் கண்டிட இயலாத ஒன்றே. ஆனால் இத்தகைய இறை வடிவங்களுக்கு பல எண்ணிக்கையில் மனைவிகள் உள்ளதாக சித்தரிக்க பட்டுள்ளது. அதுபோலவே,முனிவர்களுக்கும் ரிஷி பத்தினிகள் எண்ணிக்கையில் பல உள்ளதாக அறிகிறோம். இதுபோன்ற கருத்துகள் ஏற்புடையது அல்ல.
__________ _____________

அப்படியானால், இதுபோன்ற பெண் உருவங்கள் சித்தரிக்கப்பட்டதன் காரணம், ஒருமானுடனின் செயல் ஆற்றல் அளவினை சக்தியின் வெளிப்பாடு என்கிறோம்.இந்த சக்தி என்பதை பெண் என்று பின்னர் வந்தவர்கள் கருதிவிட்டனர். இதுபோன்ற அரிதான செயல்களை செய்தவர்களின் ஆற்றலினை குறிப்பிடும் அடையாளமே ,பிற்காலத்தில் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு உருவகம் கொடுத்துவிட்டனர். அதாவது, மகாவிஷ்ணுவிற்கு பத்தாயிரம் மனைவிகள் என்று ஒரு பதிவு உள்ளது. இது உண்மையில் மனைவிகள் அல்ல. பத்தாயிரம் நபர்களின் ஆற்றல் அவர் ஒருவரிடமே குவிந்து உள்ள சர்வ வல்லமை படைத்தவர்,என்பதே அது.
இந்தவகையில் சேர்ந்ததே அகத்தியருக்கு பதினெட்டு மனைவிகள் என்பதும்.
______ _______ ________
எனவே, இன்றுமுதல் வாசியின் வழியில் நின்று நல் சிந்தனை கொள்வோம்.


0 comments:

Post a Comment